ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் ஸ்பெய்ன் நாட்டுக்காரர்!


ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை, கோவை, மதுரை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், மாணவர்கள் பேரணி, உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை வஉசி மைதானத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்து பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டதில், ஸ்பெய்ன், பிலிப்பைன்ஸ், மங்கோலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டம் குறித்து இதில் ஈடுபட்டுள்ள ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த மொரிசியோ என்பவர் "சிம்ப்ளி சிட்டி"க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



நான் எனது நண்பர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவன பணிக்காக இந்தியா வந்தேன். இங்கு ஜல்லிக்கட்டுக்கு தடை இருப்பதையும், அதற்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் அறிந்து கொண்டு இங்கு வந்தேன். 

எங்க ஊர் காளை சண்டை மிகவும் பிரபலம். இருந்த போதும் மக்களை மீறி அங்கு எதுவும் நடக்காது. 5 காளைகளை விளையாட்டின் போது கொலை செய்வார்கள். அங்கு அது பாரம்பரிய விளையாட்டு என்பதால் அந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை. 

ஆனால், எனக்கு தெரிந்த வரையில், ஜல்லிக்கட்டு என்பது அமைதியான முறையில் காளைகளை தழுவி விளையாடும் விளையாட்டு. இங்கு காளைகள் கொல்லப்படுவதில்லை. அதனால் ஜல்லிக்கட்டு இங்கு கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டிற்காக திரண்ட கூட்டத்தை பார்த்து நானும் நண்பர்களும் காளைகள் போல் மிரண்டு போனோம்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...