சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்குச் சேகரிப்பு மேற்கொண்டார். குழந்தைக்கு துதித்ரா என பெயரிட்டு மக்களிடம் நெருக்கம் ஏற்படுத்தினார்.


Coimbatore: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram சிங்காநல்லூர் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நந்தா நகர், திருக்குமரன் நகர் எக்ஸ்டென்ஷன், திருக்குமரன் நகர், SRD லேஅவுட், டெக்ஸ்டைல் லேஅவுட் போன்ற பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.






வாக்குச் சேகரிப்பின்போது AIADMK அரசின் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் விரிவாக எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பகுதி மக்கள் வேட்பாளர் K R Jayaram-க்கு மேள தாளங்கள் முழங்க பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.




சிறப்பு அம்சமாக MGR வேடமனிந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த K R Jayaram மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தார். இதன்மூலம் தமிழக மக்களின் அன்பிற்குரிய தலைவர் MGR-ன் நினைவை மீட்டெடுத்து மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்தார்.




அப்பகுதியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பெயர் சூட்ட வேட்பாளரிடம் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்று K R Jayaram குழந்தைக்கு 'துதித்ரா' என பெயரிட்டு ஆசி வழங்கினார். இந்த செயல் மக்களிடம் அவருக்கான நெருக்கத்தை மேலும் அதிகரித்தது.




வாக்குச் சேகரிப்பு பணியில் பகுதி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர்கள் சசிகுமார், சந்திரசேகர், தேசிய ஜனநாயக கூட்டணியின் BJP, AMMK, PMK கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், AIADMK நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்குச் சேகரிப்பில் பங்கேற்றனர்.




தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளரின் பல்வேறு முயற்சிகள் கட்சிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...