ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக முதியோர் ஆதரவற்றோர் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்!


ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள கோவை  மாநகராட்சி முதியோர் ஆதரவற்றோர் காப்பகத்தில் நேற்று 15/01/2017 பொங்கல் விழா ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக  பாரம்பரியப்படி  கோலாகலமாக நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பம்சமாக ஆதரவற்ற முதியோர்களுடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டோரும் இணைந்து இந்த பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.





விழாவில்   உரி அடித்தல் விளையாட்டு, கயிறு இழுத்தல்,  எலுமிச்சை பழம் வாயில் சுமந்து செல்லும் விளையாட்டு, போன்ற விளையாட்டுகள் முதியோர்களுக்காக நடத்தப்பட்டது. 

போட்டிகளில் வெற்றி தோல்வியென பிரிக்காமல்  போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து ஆதரவற்ற முதியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.



மேலும் நிகழ்ச்சியை மெருகூட்ட சாலை வழி செல்பவர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு அவர்களும் கலந்து கொண்டதும் விழா மேலும்  சிறப்படைய காரணமாக இருந்தது. மேலும் திரு தொல்காப்பியன் அவர்களின் சிலம்பாட்டமும், தடம் அமைப்பின் இசை  நிகழ்ச்சியும் இணைந்து இருந்தது. 

இந்த பொங்கல் விழா காப்பகத்தில் உள்ள  முதியவர்களுக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அடைந்தது  மட்டும் இல்லாமல் பலருக்கு இது போன்ற விழாவில் கலந்துக் கொண்டது வாழ்வில் முதன் முறையாகவும் இருந்தது.



விழாவை காண வந்த பொதுமக்கள் கூறும் பொழுது ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் ஆதரவற்றவர்களுக்கான  இந்த பொங்கல் விழாவை பார்க்கும் பொழுது மெய் சிலிர்த்து போகிறோம்.  எங்கள் வீட்டில் கூட இவ்வளவு மகிழ்ச்சியான எந்த விழாவும் நடந்தது இல்லை கண்டதும் இல்லை. பாட்டிகளின் இந்த உற்சாகமான விளையாட்டை கண்டே நாங்கள் காப்பகத்தினுள் வருவதற்கு காரணமாக இருந்தது என்றனர். 

இறுதியாக பொங்கல் வைத்து இயற்கை இறைவனுக்கு படையல் இட்டு அனைவருக்கும் கரும்பும் பொங்கலும் வழங்கப்பட்டது.

காப்பகத்தில் உள்ள முதியவர்களுக்கும் புத்தாடை வழங்கப்பட்டது, மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு புத்தாடைகளும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது, அத்துடன் போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைவருக்கும்  பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. 

முதியவர்களுக்காக இந்த  உதவி செய்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக பொங்கல் வாழ்த்துக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...