இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக - பாஜக, மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்


இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய அனைவரும் போராட வேண்டுமெனவும், பீட்டாவை தடை செய்ய மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு சாதகமான தீர்ப்பு வருமென எதிர்பார்த்து இருந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 2012 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்த போது தான்  ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், ஜல்லிக்கட்டு உரிமை பறிபோன போது கூட்டணியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் வெளியே வராத திமுக உள்ளிட்ட யாருக்கும் தற்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை விமர்சனம் செய்ய தார்மீக உரிமையில்லை என தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்தால் நிரந்தர தடை விதிக்க வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், தற்போது கூட நம்பிக்கையுடன் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய பாஜக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினால் தமிழக அரசை கலைக்க வேண்டுமென குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத பீட்டா அமைப்பிற்கு எந்த உரிமையும் இல்லை என கூறிய அவர், இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய அனைவரும் போராட வேண்டுமெனவும், அதற்கு பாஜக அரசும் முயற்சி செய்யுமென தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்காக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டுமென கூறுவது சரியானது அல்ல எனவும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை மத்திய பாஜக அரசு ஏமாற்றவில்லை என கூறிய தமிழிசை செளந்திரராசன், தமிழ் உணர்வில் பாஜக யாரை விடவும் குறைந்தவர்கள் இல்லையென தெரிவித்தார்.   

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...