தேசிய அளவில் பல்கலை.,க்கு இடையேயான போட்டிகளின் பங்கேற்க கோவை வந்துள்ள வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. 

அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக நடத்தப்படும் இப்போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள 189 பல்கலைக் கழகங்களை சேர்ந்த 2605 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற 46 போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதன் முதல் நாளான நேற்று ஓட்டப்பந்தயம்,  நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போன்ற போட்டிகளுக்கான தேர்வு  சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் வருகின்ற 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தடகள போட்டிகளை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் இன்று துவங்கி வைத்தார். 

இதனிடையே, தடகள போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு மாநில வீரர், வீராங்கனைகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விளையாட்டு மைதானத்தில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், மைதானத்தில் இருந்து வெகு தொலைவில் வீரர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தடகள வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும், தங்குமிடங்களிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், இதனால் தனியாக அறை எடுத்து தங்க வேண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...