வேளாண்மை செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பச்சை சட்டை அணிந்து கோவை வழக்கறிஞர்கள் பொங்கல் கொண்டாட்டம்


தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வேளாண்மை செழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் வழக்கறிஞர்கள் பச்சை சட்டை அணிந்து கோவை நீதிமன்ற வளாகத்தில் பொங்கலை கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வோரு ஆண்டும் கோவை நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் ஒருபகுதியாக குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் 9-ஆம் ஆண்டு பொங்கல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வின் போது வழக்கறிஞர்கள் சர்க்கரை பொங்கல் வைத்து அனைத்து வழக்கறிஞர்களுக்கும் கொடுத்தும், மாட்டின் கொம்புகளுக்கு சாயம்பூசி அலங்கரித்தும் வழக்கறிஞர்கள் வழிப்பட்டு உற்சாகத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

மேலும், வழக்கறிஞர்களும் இளைய தலைமுறையினரும் பொங்கல் விழாவை பற்றி தெரிந்துகொள்ளவும் இதை பின்பற்றவும் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையானது நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருவதாகவும் குற்றவியல் வழக்கறிஞர்கள் தெரிவித்தார். 

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வேளாண்மை செழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பச்சை சட்டை அணிந்து பொங்கலை கொண்டாடினர். மேலும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...