தமிழக மக்களின் கோரிக்கையை மத்திய அரசு உடனே கவனிக்கும் என்பதில் பொங்கல் விடுமுறையால் தெளிவாகியுள்ளது என தமிழிசை தகவல்


பொங்கல் பண்டிகை பொது விடுமுறை தின பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தமிழர்கள் மத்திய அரசால் உதாசீனப்படுத்தப்படுவதோ புறக்கணிக்கப்படுவதோ இல்லை என்பதும் அவர்களது கோரிக்கை உடனே கவணிக்கப்படும் என்பது தற்போது தெளிவு படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக பாஜகவின் அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு பொங்கலை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது என்றும், நேற்றைய தினம் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் இதுகுறித்து பேசி அழுத்தம் தந்ததாகவும் குறிப்பிட்டார். 

தமிழர்கள் உதாசீனப்படுத்தப்படுவதோ புறக்கணிக்கப்படுவதோ இல்லை என்பதும், அவர்களது கோரிக்கை உடனே கவணிக்கப்படும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது எனவும், மக்கள் பிரச்சனையில் பாஜக என்றுமே தமிழகத்திற்கு எதிராக இருக்காது என்றும் சுட்டிக்காட்டினார். 

மேலும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தால் மட்டும் போதாது எனவும், விவசாயிகளின் அடிப்படை தேவைகளை அறிந்து ஆறுகளை தூர் வாருதல், மணல் அள்ளுவதை தடுத்தல் மற்றும் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துதல் போன்றவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பொங்கல் விடுமுறை என்பது 15 ஆண்டு காலமாக சிறப்பு பட்டியலில் தான் இருப்பதாகவும், புதிதாக எந்த அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் நீக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...