ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து கோவை மெடிக்கல் சென்டர் சாதனை


இயந்திர விசையைச் கொண்டு (ரோபோடிக்) அறுவை சிகிச்சை செய்முறையை தற்பொழுது கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கொண்டுவந்துள்ளது. இந்த அறுவைசிகிச்சை முறையில் ஈடுபடுபவர்கள் ஓரிரு மருத்துவர்களே ஆகும்.

மருத்துவர்கள் ரோபோடிக் இயந்திரத்தின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள். மருத்துவர்கள் கன்சோல் என்ற அமைப்பின் முன் அமர்ந்து ரோபோடிக் இயந்திரத்தின் கருவிகளை இயக்கி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் ரோபோடிக் அறுவை சிகிச்சையால் பல்வேறு நன்மைகள் உண்டு. ஒரு மிகச்சிறிய துளையின் வழியாக உடல் உறுப்புகளை அணுகி அதன் மூலம் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் உடலில் சிறிய தழும்பு மட்டுமே ஏற்படும். அது தவிர நோயாளிக்கு ஏற்படும் இரத்தக்கசிவும் மிகக்குறைவு.

கேஎம்சிஎச் ரோபோடிக் கார்டியாக் சர்ஜரி இன்ஸ்டிடியூட் இயக்குநர், தலைமை ஆலோசகர் மற்றும் மார்பு பகுதி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரஷாந்த் வைஜியநாத் 10 ஆயிரம் அறுவை சிகிச்சை செய்த சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் பைபாஸ், சிக்கலான பெருந்தமணி குருதி நாள யெளிவு, வால்வு பழுது மற்றும் ரேடோ பைபாஸ் அறுவை சிக்சை போன்றவற்றை மேற்கொண்டுள்ளார்.

கொங்கு மண்டலத்திலேயே கேஎம்சிஎச் மருத்துவமனையில் இவர் தான் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். ரோபோடிக் இருதய அறுவை சிகிச்சையிலும் பயிற்சி பெற்றவர் மருத்தவர் பிரஷாந்த் வைஜியநாத்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இருதய ரோபோடிக் அறுவை சிகிச்சை நேற்று முதல்முறையாக நடைபெற்றது. இதுகுறித்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிச்சாமி கூறுகையில், "வழக்கமாக மேற்கொள்ளப்படும் 10 - 12 அங்குலம் அளவிற்கு மார்பை திறத்து செய்யப்படும் அறுவை சிகிச்சையை காட்டிலும், ரோபோடிக் அறுவை சிகிச்சை 1 - 2 செ.மீட்டர் அளவில் குறைந்த அளவு கருவிகளைக் கொண்டு செய்யப்படுகிறது. 



குறைந்த அளவு வலி, மயக்க அளவு, இரத்த இழப்பு, விரைவாக குணமடைதல், சிறிய அளவிலேயே ஏற்படும் தழும்பு போன்றவை இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும். அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்காமல் ஒரு சில நாட்களிலேயே குணமடைந்து வீட்டுக்கு திரும்ப இயலும்" இவ்வாறு கூறினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...