சுகாதார வசதிகளை செய்து தராத மாநகராட்சியை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பாக மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது


கோவை மாநகராட்சியின் 75-வது வார்ட்டிற்குட்பட்ட உப்பிலியான் திட்டு பகுதி மக்கள் காலைக்கடன்களை கழிக்க பொது சுகாதார மையம் அமைத்து தர வேண்டி பல்வேறு மனுக்களை அளித்து வந்துள்ளனர்.

பொது சுகாதார மையம் கட்ட 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும் இதுவரை கழிப்பிடம் கட்டப்படாததால் அப்பகுதி மக்கள் அருகாமையில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதிகளை பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில் தங்கள் பகுதியில் சுகாதார வசதிகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் பேரவை தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பேசிய அவர்கள், உரிய சுகாதார வசதிகள் செய்யப்படாததால் ரயில்வே தண்டவாளங்களை காலை கடன்களை கழிக்க பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் ரயில்வேத்துறையின் அபராத  தண்டனைகளை ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். 

மேலும் தங்கள் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் என்னவானது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக பொது சுகாதார கழிப்பிடம் அமைத்துத் தர வேண்டும் எனவும் வலியுறித்தினர். 

இதையடுத்து மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...