மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் அவசரகால கடன் உதவி வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு பரிந்துரைக்குமாறு மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர். செயல்மூலதன உச்சவரம்பை 20 சதவீதம் உயர்த்தவும் கோரினர்.


Coimbatore: மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழில் துறையினருக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பொதுத்துறை வங்கிகள் அவசரகால கடன் உதவி வழங்க அறிவுறுத்த வேண்டும் என, கோவையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.



இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் தொழில் துறையினர் கலந்தரையாடும் நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை கம்ப்ரஸர் தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கத்தினர், ரிசர்வ் வங்கி அதிகாரிகளிட‌ம் கோரிக்கை மனு அளித்து பேசினர்.

இதுகுறித்து கோவை கம்ப்ரஸர் தொழில் நிறுவனங்கள் சங்கத்தின்(COCIA) தலைவர் ரவீந்திரன் கூறும் போது, மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக உற்பத்தி துறை சார்ந்த தொழில் நிறுவனத்தினர் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சனிக்கிழமை திருப்பூரிலும் அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை கோவையிலும் தொழில் துறையினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதிகாரிகளிடம் எங்கள் சங்கம் சார்பில் மனு அளித்து பேசினோம்.

மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள தொழில்துறையினருக்கு அவசர கால கடன் உதவி திட்டத்தை அமல்படுத்த பொதுத்துறை வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசரகால கடன் உதவி திட்டத்தை போல செயல் மூலதன(Working Capital)உச்சவரம்பை தற்காலிகமாக 20% உயர்த்த வேண்டும். தற்போது தொழில் துறையினர் பெற்றுள்ள கடன் உதவி திட்டங்கள் ஆண்டுதோறும் புதுப்பித்தல் என்ற நடைமுறை அமலில் உள்ள காரணத்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் நடைமுறை அமல்படுத்த வேண்டும்.

'என்பிஏ' என்று அறிவிக்கப்படும் நடைமுறை மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதங்களாக நீட்டிக்க வேண்டும். ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றம் செய்யும் போது வசூலிக்கப்படும் பிராசசிங் கட்டணம் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் மனுவாக அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...