' தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரும்' மாநிலச் செயலாளர் முத்தரசன் உறுதி.


வறட்சி பாதுகாப்புகள் குறித்து ஆய்வு அறிக்கையை தமிழக அரசு விரைவாக தாக்கல் செய்து பேரிடர் நிதியை மத்திய அரசிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
 கோவை சின்னியம்பாளையம் தியாகிகளின் 71 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு இடதுசாரிகள் சார்பில் அவர்களது நினைவு இடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்பாடு பொதுமக்களுக்கும், முகவர்களுக்கும் தான் இழப்பு என்பதால், பெட்ரோல் முகவர்கள் அறிவிப்பு சரியானது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த பல மாதங்களாக வறட்சி நிலவியதால் நம்பிக்கைக்குரிய பதில் அரசிடம் இருந்து வராததால் தான் விவசாயிகள் உயிரிழந்ததாக கூறிய அவர், விவசாயிகள் நோய்வாய், வயோதிகம் காரணமாக இறந்ததாக சில அமைச்சர்கள் கூறுவது கண்டனத்துக்குரியது என்றார்.

 விவசாயிகளை கொச்சைப்படுத்தும் செயல் என்றார். தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும், தினமும் 400ரூபாய் கூலி, கடந்தாண்டு காப்பீட்டுத் தொகையையும், தனியாரிடம் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியவர் பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்தும் வர்தா புயலுக்கு முதற்கட்டமாக கேட்கப்பட்ட 1000 கோடி ரூபாயில் ஒரு பைசா கூட இதுவரை தராமல் தமிழக அரசுக்கு எப்போதும் உதவ தயார் என்று மத்திய அரசு கூறுவதை சுட்டிக்காட்டி சாடினார்.

 நீதிமன்றத்தை காரணம் காட்டி தமிழக பாஜக, பொன். ராதாகிருஷ்ணன் தவறான தகவலை கொடுத்து வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரும் என்று உறுதியளித்தார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...