ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி அழைக்காமல் ஒன்று சேர்ந்த கோவை மக்கள்


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் உள்ளிட்டு பல்வேறுகட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது.



இதனிடையே, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளையதலைமுறை என்னும் தன்னார்வ அமைப்பினர் 10 பேர், கோவை வ.ஊ.சி மைதானத்தில் இன்று "நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்" "I Support Jallikattu" போன்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை கையில் ஏந்தியவாறு அமர்ந்தனர்.



இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தோர் தாங்களும் ஜல்லிக்கட்டுக்கு விருப்பத்தை தெரிவிப்பதாகக் கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் யாரும் அழைக்காமல் அமர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவிநாசி சாலையில் பேரணியில் ஈடுபட்டனர். பின், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அனுமதியின்றி இதுபோன்ற பேரணியில் ஈடுபடக் கூடாது என கூறியதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.



இதுகுறித்து, இளையதலைமுறை தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோகுல், நமது நிருபரிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு. பல்வேறு காரணங்களுக்கு இதற்கு அரசாங்கமும், நீதிமன்றமும் தடை விதித்து வருகிறது. வரும் பொங்களன்றும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பில்லை. மக்கள், நாமாக ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டினை நடத்தி பாரம்பரியத்தை நிலைநாட்ட வேண்டும்" இவ்வாறு கூறினார்.

Newsletter

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...