ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி அழைக்காமல் ஒன்று சேர்ந்த கோவை மக்கள்


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் உள்ளிட்டு பல்வேறுகட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது.



இதனிடையே, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளையதலைமுறை என்னும் தன்னார்வ அமைப்பினர் 10 பேர், கோவை வ.ஊ.சி மைதானத்தில் இன்று "நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்" "I Support Jallikattu" போன்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை கையில் ஏந்தியவாறு அமர்ந்தனர்.



இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தோர் தாங்களும் ஜல்லிக்கட்டுக்கு விருப்பத்தை தெரிவிப்பதாகக் கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் யாரும் அழைக்காமல் அமர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவிநாசி சாலையில் பேரணியில் ஈடுபட்டனர். பின், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அனுமதியின்றி இதுபோன்ற பேரணியில் ஈடுபடக் கூடாது என கூறியதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.



இதுகுறித்து, இளையதலைமுறை தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோகுல், நமது நிருபரிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு. பல்வேறு காரணங்களுக்கு இதற்கு அரசாங்கமும், நீதிமன்றமும் தடை விதித்து வருகிறது. வரும் பொங்களன்றும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பில்லை. மக்கள், நாமாக ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டினை நடத்தி பாரம்பரியத்தை நிலைநாட்ட வேண்டும்" இவ்வாறு கூறினார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...