ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் "கணினி கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமற்றதிற்கான" கருத்தரங்கு நிறைவுவிழா


கோவையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2017ம் ஆண்டின் (ICCCI) கணினி கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமற்றதிற்கான அகில உலக கருத்தரங்கு நிறைவுவிழா இன்று நடைபெற்றது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்காவா சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன், தலைமை வடிவமைப்பாளர் குமார் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 



இந்நிகழ்ச்சியில், கணினி பொறியியல் துறைத்தலைவர் கண்ணம்மாள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் தங்கவேலு தனது உரையில் மாணவர்கள் தங்கள் கல்லூரி பருவத்திலேயே ஒரு தொழிலதிபராகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார். சிறப்பு விருந்தினர் குமார் மாதவன் பேசுகையில், மாணவர்கள் கல்லூரி பாடங்களை புரிந்து கற்க வேண்டும் மேலும் அவற்றை ஆராய்ச்சி நோக்கத்துடன் அனுக வேண்டும் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து முரளி கிருஷ்ணன் கூறுகையில், தொலைபேசி வர்த்தகம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாததாக விளங்குகிறது. மேலும் மாணவர்கள் வெற்றியாளர்களாக இருக்க வேண்டுமெனில் தொழில்நுட்பத்தில் தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும் எனக் கூறினார். 



இறுதியில், இக்கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு விருதுகளும், சன்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தகவல் தொடர்பியல் துறைத்தலைவர் பிரகாஷ் நன்றியுரைக் கூறினார். 



Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...