சி.எம்.சி காலனியில் முறையாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள சி.எம்.சி காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெரைட்டி ஹால் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்குவதாகவும், அதுவும் இரவு நேரத்தில் மட்டுமே வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 

இந்தபகுதியில் பெரும்பாலும் மாநகராட்சி துப்புரவுபணியாளர்களே வசிக்கும் நிலையில் குடிதண்ணீர் கூடகிடைக்காமல் அவதிப்படும் நிலை இருப்பதாகவும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலைக்குள் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். குடிநீருக்காக பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக வெரைட்டி ஹால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...