பாலக்காட்டில் முழு அடைப்பு-கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்


கேரள மாநிலம் பாலக்காட்டில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் கோவையிலிருந்து கேரளாவிற்கு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவில்லை.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற பா.ஜ.க பிரமுகர் வீட்டின் மீது  பெட்ரோல் குண்டு வீசியதில்  வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை கண்டித்து பா.ஜ.க சார்பில் பாலக்காடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி அங்கு இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் துவங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் எல்லைப்பகுதியான வாளையாறில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து கேரள மாநில பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு எல்லைப்பகுதியான கோவை வழியாக நாள்தோறும் பால், முட்டை, இறைச்சி, காய்கறிகள் என ஏராளமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முக்கிய பாதையான பாலக்காட்டில் நடைபெற்று வரும் முழு அடைப்பு காரணமாக இந்த பொருட்கள் எல்லைப்பகுதியில் தேங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...