எஸ்ஆர்ஐடி வணிகவியல் கல்லூரியின் சார்பில் மேலாண்மை திறன் வளர்ச்சி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம்


எஸ்ஆர்ஐடி வணிகவியல் கல்லூரி சார்பில் ஒரு நாள் மேலாண்மை திறன் வளர்ச்சிக்கான பயிற்சியை ஜனவரி 25ம் தேதி வழங்கப்படவுள்ளது. இதில், இறுதியாண்டு படிக்கும் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவில் இளங்களை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியானது மாணவர்களின் பணித்திறன், வேலைவாய்ப்புக்கான திறனை மேம்படுத்திக்கொள்வதற்காக அளிக்கப்பட உள்ளது. 

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சியில், வேலைவாய்ப்பிற்கான தங்களது விவரங்கள் குறித்த அறிக்கை தயாரிப்பது, மாறுபட்ட சிந்தனை ஊக்குவித்தல், குழு கலந்துரையாடல், அணியாக செயல்படுவது, மற்றும் தலைமை பண்புகள் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளது.

மத்திய அரசின் சார்பில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள எஸ்ஆர்ஐடி கல்லூரியில் செயல்பட்டு வரும் அனுபவத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பயிற்சி பிரிவால் இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் இணையதள தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், பங்குபெரும் மாணவர்களுக்கு பயிற்சிக்கான உபகரணங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு தங்கும் இடமும் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சிக்கு தங்களது கல்லூரி மாணவர்களை அணுப்ப விருப்பமுள்ள கல்லூரி பேராசிரியர்கள், எஸ்ஆர்ஐடி கல்லூரி பேராசிரியர்களான பி.சியாம்சுந்தர்- 9894146967 மற்றும் தீபா சி.குமார்- 8870653740 ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...