தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தேனீ வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், ஜனவரி மாதத்திற்கான பயிற்சி வரும் ஜனவரி 6-ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது.

1. தேனீ இனங்களை கண்டுபிடித்தல்

2. பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம்

3. தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல்

4. அதிகரிக்கும்  பயிர்களின் விவரம்

5. தேனைப் பிரித்தெடுத்தல்

6. தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம்

பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாள் அன்று காலை 9 மணிக்குள்ளாக வேளாண் பூச்சியியல் துறைக்கு வர வேண்டும். பயிற்சி கட்டணம் 250 ரூபாய் வசூலிக்கப்படும் . பயிற்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 மணிவரை ஆகும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

இணையம் மூலம் பயிற்சி கட்டணத் தொகையை செலுத்த முறைப்படி வங்கி கணக்கு எண் 30078485742, TNAU கிளை, பாரத ஸ்டேட் வங்கியில் வரைவோலை மூலம் முன்கூட்டியே செலுத்தி இரசீது நகல் எடுத்து வர வேண்டும். அல்லது, பயிற்சித் தொகையினை பயிற்சி நாளன்றும் ரொக்கமாக செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை - 641 003 என்ற முகவரியிலோ அல்லது 0422-6611214 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...