ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா- 2017 மேடை நாடகப் பயிலரங்கம்


ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பாக முத்தமிழ் விழா- 2017 நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக புதனன்று (இன்று) மேடை நாடகப் பயிலரங்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் முனைவர் கி.சித்ரா தலைமை வகித்தார். தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் கு.பாக்கியம் அனைவரையும் வரவேற்று பேசினார். பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் லி.ராம்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிப்புக்கலை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

மேலும்  அவர் தனது உரையில் கூறுகையில், தமிழின் தொன்மையான கலை வடிவமான கூத்துக்கலையில் இருந்துதான் தற்காலத்திய நவீன நாடகங்கள் தோற்றம் பெற்றன என்றும், சங்ககால நாடக வகைகளில் பெண்கள் நடித்து வந்ததாகவும், ஆனால், இடைக்காலத்தில் ஆண்களே பெண் வேடம் அணிந்து நடித்ததாகவும், பிறகு 19ம் நூற்றாண்டிற்கு பின்தான் பாலாம்பாள், பாலாமணி போன்ற பெண் கலைஞர்கள் நடிக்கத் தொடங்கினர் என்று கூறினார்.

"நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்ற கவிமணியின் கூற்றிற்கேற்ப மக்களின் கண்ணையும், செவியையும், கருத்தையும் கவரும் வகையில் மேடைநாடகங்கள் அமைந்து மக்களின் வாழ்வைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.



பயிலரங்கத்தின் இறுதியில் மாணவ நாடகக் குழுவின் உறுப்பினர்களைக் கொண்டு, பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளும், இல்லத்தரசிகளின் துயரங்களையும் மையமாகக் கொண்ட தமிழச்சி தங்க பாண்டியனின் "கூந்தல் கனவுகள்" என்ற நாடகத்தினை அரங்கேற்றி மாணவியர்களுக்கு நேரடி செயல்முறை பயிற்சியும் அளித்தார்.



இதில், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் க.அபிநயா, சந்திரமதி, சந்திரிகா, ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கிருத்திகா, ஹரிபிரசாத், அருந்ததி, கல்பனா, கிருபாசக்தி ஆகிய மாணவ, மாணவிகள் இணைந்து நடத்திய கலைக் கூத்து நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.



இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும்  மாணவியர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...