ஊதியப் பிரச்சனைக்கு தீர்வுகோரி பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஊதியப் பிரச்சனைக்கு தீர்வுகோரி பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



அம்மனுவில், கோவை மாவட்டம், மயிலேரிபாளையம் கிராமம், பொள்ளாச்சி சாலையில் செயல்படும் டி டி கே பிரஷ்டீஜ் லிட் நிறுவனத்தில் ஊழியர்களான நாங்கள் சுமார் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம்.

நிர்வாகம் நிர்ணயிக்கும் அளவிற்கு ஏற்றாற்போல் ஊழியர்களும் தரமான வகையில் சமையலுக்கு தேவையான குக்கர்களை தயாரித்துக் கொடுப்பதால் அதிக லாபத்துடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், எங்களுக்குரிய பணிகள் நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்குரிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை. ஒசூரில் செயல்படும் எங்களது தலைமை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமமான பணி மூப்பு பணி அளவுகளை செய்து வரும் தொழிலாளர்களின் சம்பளத்தில் சுமார் 30 சதவிகிதம் மட்டுமே எங்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. 

எங்களது தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பலன் இல்லாததால் நாங்கள் பி எம் எஸ் என்னும் மிகப்பெரிய மத்திய தொழிற்சங்க அமைப்புடன் இணைக்கப்பட்ட பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து மனு அளித்துள்ளோம்.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தங்களுக்கு உரிய ஊதியம் பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...