வாலாங்குளம் பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


வாலாங்குளம் பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கிடைக்க நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை மாவட்டம், வாலாங்குளம் பகுதியில் 35 வருடத்திற்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மீதமுள்ளவர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கிறோம். வாலாங்குளம்  பகுதியில் இருந்து காலி செய்யுங்கள் என மாவட்ட அதிகாரிகள் சொன்னார்கள். பின்னர், 2015 மே 8ம் தேதியன்று எங்களை வாலாங்குளம் பகுதியை விட்டு அகற்றி எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒரு கடிதம் கொடுத்தனர்.

அக்கடிதம் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் தற்போது வரை எங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை தங்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...