விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்- திட்டமிட்டு வெற்றிபெற்ற கோவை காவல் துறை


கடந்த 2015 மற்றும் 2016 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்டது போன்ற உயிரிழப்பு மற்றும் சாலை விபத்துகள் 2017 புத்தாண்டு தினத்தன்று ஏற்படக் கூடாது என திட்டமிட்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் கடந்த 15 நாட்களாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், நட்சத்திர ஓட்டகள் மற்றும் டாக்ஸி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி கொண்டாட்டம் முடிந்து செல்பவர்கள் பத்திரமாக வீடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், விழிப்புணர்வு வாழ்த்து அட்டைகள், வாட்ஸ்அப் செய்திகள், வானோலி மூலம் விழிப்புணர்வு, உள்ளூர் கேபிள் சேனல்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



22 வாகன சோதனை மையங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனங்கள் ஓட்டிய 1000 பேர் காவல் துறையினரால் ஏற்படுத்தப்பட்ட ஷாமியானா பந்தலில் அமர வைக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்களது நடமாட்டம் கட்டுபடுத்தப்பட்டது.

12 மணிக்கு மேல் காவல்துறை சார்பாக கேக் வெட்டி கொடுக்கபட்டது. 22 வாகன பரிசோதனை மையங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை கே.எம்.சி.எச் மருத்துவமனை நிர்வாகம் செய்திருந்தனர். நா.மகாலிங்கம் மன நலம் ஆலோசனை மையம் மற்றும் யெங் இந்தியன் சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு தன்னார்வலர்களாகவும் பணியாற்றினர்.

கோவை டைடல் பார்க்கை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் சித்தார்த் காவல்துறையின் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டத்தால் ஈர்க்கப்பட்டு தன்னார்வலராக சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இதற்கான ஏற்பாடுகளை காவல் துணை ஆணைய‌ர் லட்சுமி (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல்துறை ஆணையர் 

சரவணன் (போக்குவரத்து) ஆகியோர் மேற்கொண்டனர். இவற்றின் மூலம் 2017 ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் உயிரிழப்பு மற்றும் விபத்துகளின்றி முடிந்தது

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...