எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் “சிகரங்களை நோக்கி” தன்னம்பிக்கை பயிலரங்கம்


கோயமுத்தூர் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் இளைஞர் சக்தி மையம் இணைந்து “சிகரங்களை நோக்கி 2016” என்ற மாணவர்களுக்கான சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் தீனா தலைமையேற்றார். இவ்விழாவில் இளைஞர் சக்தி மையம் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக லட்சியத்தென்றல் அரிமா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டார்.



நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; உலக நாடுகளில் 60% இளைஞர்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான். தற்போது இந்தியர்கள் அறிவியல், நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றில் பல நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் பெருமளவில் இந்தியர்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றனர். மரபுரீதியாகவே தமிழர்கள் நுண்ணறிவுத் திறன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து உலகின் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் தற்கால சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றிபெறவேண்டும். வாழ்க்கையில் ஒரு மனிதன் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருக்க வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் கவிஞர் அன்புசிவா, யு.ஐ.டி. பேராசிரியர் ஆனந்தபார்த்திபன், பேச்சாளர் ஆனந்தி ஆகிய ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக கலந்துகொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரி  துறைத் தலைவர்களும்  பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தமிழ்த்துறைத் தலைவர் விஸ்வநாதன்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

கோயமுத்தூர் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் இளைஞர் சக்தி மையம் இணைந்து “சிகரங்களை நோக்கி 2016” என்ற மாணவர்களுக்கான சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் தீனா தலைமையேற்றார். இவ்விழாவில் இளைஞர் சக்தி மையம் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக லட்சியத்தென்றல் அரிமா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; உலக நாடுகளில் 60% இளைஞர்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான். தற்போது இந்தியர்கள் அறிவியல், நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றில் பல நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் பெருமளவில் இந்தியர்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றனர். மரபுரீதியாகவே தமிழர்கள் நுண்ணறிவுத் திறன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து உலகின் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் தற்கால சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றிபெறவேண்டும். வாழ்க்கையில் ஒரு மனிதன் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருக்க வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் கவிஞர் அன்புசிவா, யு.ஐ.டி. பேராசிரியர் ஆனந்தபார்த்திபன், பேச்சாளர் ஆனந்தி ஆகிய ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக கலந்துகொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரி  துறைத் தலைவர்களும்  பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தமிழ்த்துறைத் தலைவர் விஸ்வநாதன்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...