வெள்ளிங்கிரி அடிவாரத்தில் ஈஷாவின் சிலை பதிக்கும் பணியால் வழித்தடம் மறந்த காட்டு யானை? ஊருக்குள் நுழைந்துவிடும் என பொதுமக்கள் அச்சம்



கோவை மாவட்டம், சாடிவயல் அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரப் பகுதியில் ஈஷா யோக மையம் இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் உள்ள நீரோடை அருகே நேற்றிரவு வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று அதே பகுதியில் தொடந்து நின்றுகொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். 

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து யானைக்கு உடல்நலன் பாதிப்பு ஏதேனும் இருக்குமா எனவும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். 

உடல் சோர்வுடன் நிற்கும் அந்த யானை மக்கள் வாழும் பகுதிக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் இன்று மாலை அல்லது இரவுக்கு பின் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதனிடையே, வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஈஷா யோகா மையம் அப்பகுதியில் உள்ள நிலங்களில் சிலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் யானை வழிதெரியாமல் அதே பகுதியில் தொடர்ந்து நின்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

கோவை சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களில் 2 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில் நீண்ட நேரமாக யானை ஒரே பகுதியில் நின்றிருப்பது முட்டத்துவயல் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை யானை நடக்க துவங்கினால் அது மக்கள் வாழும் பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...