மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையினை எளிமையாக்கக் கோரி சிட்டிசன் வாய்ஸ் கிளப் மனு



சிட்டிசன் வாய்ஸ் கிளப்-யின் தலைவர் சி.ஜெயராமன் மற்றும் செயலாளர் வி.ஏ.சண்முகம் ஆகியோர் இன்று கோவை மாவட்ட மின்சாரத் துறை தலைமை பொறியாளரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மின் கம்பிகளில் உள்ள மின் இணைப்புகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செல்போன் கோபுரங்கள் மழை, புயலால் சரிந்துவிடாமல் இருக்க கம்பிகளைக் கொண்டு அதற்கு துணை அமைக்க வேண்டும். மேலும், செல்போன் கோபுரங்கள் மின்சார இணைப்புகள் அருகில் இல்லாதவாரு அமைக்க வேண்டும்.

மின்சாரத் துறை சார்பில் மின்சாரக் கட்டணம் செலுத்த பல்வேறு வசதிகளை செய்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிரெடிட், டெபிட் உள்ளிட்ட வங்கி கணக்கு அட்டையினைக் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மின்சாரக் கம்பிகளிலும் அடையாள எண்களை எழுத வேண்டும். இதன் மூலம் ஏதேனும் புகார் அளிக்க வசதியாக இருக்கும்" இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...