அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவியேற்குமாறு கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் சசிகலா படத்தின் மீது சாணி வீசியதால் பரபரப்பு


அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலாவை வரவேற்று மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியினர் வரவேற்பு தந்துவரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அக்கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



இந்நிலையில், கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக தலைமையேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். 

அந்த போஸ்டரில் சசிகலா புகைப்படம் இருந்துள்ளது. இதைக்கண்டு கோபமுற்ற அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்து வரும் புஷ்பா என்பவர் மாட்டு சாணத்தை வீசியுள்ளார்.



இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல் துறையினர் அதனை அப்புறப்படுத்தி போஸ்டரை கிழித்து எறிந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை கொன்ற சசிகலா வரக்கூடாது என்பதற்காகத்தான் போஸ்டரில் மாட்டுச்சாணத்தை வீசியதாகவும், அம்மாவின் வாரிசான தீபா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக வந்தால் தாம் வரவேற்பதாகவும், எக்காரணத்தைக்கொண்டும் சசிகலாவை பொதுச்செயலாளராக வரவிடக்கூடாது என்றும் புஷ்பா தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...