வீட்டிற்குள் கார் நுழைந்து 5 பேர் காயம்- காரை ஓட்டியவர் தலைமறைவு

கோவை வடவள்ளியில் இருந்து வேடப்பட்டி செல்லும் வழியில் உள்ள அஜ்ஜனூரில் சாலையின் இருபுறங்களிலும் வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் வடவள்ளியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று அஜ்ஜனூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த காளிமுத்து என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்தது.



இந்த விபத்தில் அங்கிருந்த காளிமுத்துவின் தாய் லட்சுமி (60), மருமகள் சரஸ்வதி (35), பேத்திகள் சங்கீதா (12), உதயசங்கரி (9) மற்றும் ரங்கநாதன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, காரை ஓட்டிவந்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி காவல் ஆய்வாளர்  சித்ரா மற்றும் காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய காரை பரிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தது சுண்டபாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...