குறுகிய கால அவகாசத்தில் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்தப்படுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

குறுகிய கால அவகாசத்தில் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்தபடுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி இந்திரா நகர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை கடலைகார சந்து 72 வார்டு இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் 40கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு ஒன்றை அளித்தனர்.அதில் தாங்கள்  இந்திரா நகர் பகுதியில் ரயில்வே சந்திப்பின் பின்புறம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருவதாகவும் தங்களுக்கு ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு சிட்டா,பீமா ரசீது,மின் இணைப்பு  என அனைத்தும் உள்ள நிலையில் கடந்த 4 வருடங்களாக ரயில்வே நிர்வாகம் விரிவாக்கத்திற்காக  காலி செய்ய நிர்பந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் கூறியவர்கள் இங்கு வசிப்பவர்கள் தாங்கள் சாதாரண தினகூலி மற்றும் நடைபாதை வியாபாரிகள் எனவும் உடனடியாக காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்திப்பதால் தங்களால் மாற்று வீட்டிற்கு முன்தொகை வழங்கமுடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை அங்கேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...