செயல்படாத நிலையில் இருக்கும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்-மிற்கு மாலை அணிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் இருக்கும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்-மிற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி அமல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் பணபுழக்கம் தடைபட்டுள்ளது. பணம் எடுக்க மக்கள் வங்கிகள் முன்பாகவும், ஏ.டி.எம் மையங்கள் முன்பாகவும் நாள்தோறும் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது. 

கோவையில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் 90 சதவிகித ஏ.டி.எம்கள் செயல்படாமல் இருந்து வருகின்றது. 

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்திற்கு அனைத்திந்த இளைஞர் பெருமன்றத்தினர் மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது வங்கி ஏ.டி.எம்-கள் அனைத்தும் முழுமையாக செயல்படவும், 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் தடையின்றி கிடைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தை மாற்றுவதற்காக காலத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவினையும் அவர்கள் வழங்கினர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...