டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுமிகள் உட்பட 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை


கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் மற்றும் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டெங்குவால் பாதிக்கப்பட்ட மூவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும், இதுகுறித்து தெரிவித்த இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல், தற்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சை காரணமாக மூவருக்கும் உடல்நிலை தேறிவருவதாகவும், டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள், இரத்ததட்டுகள் போன்றவை போதுமான அளவில் உள்ளதாகவும் கூறினார். 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய அவர், பொதுமக்கள் தங்களுடைய சுற்றுப்புறத்தை நீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...