திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு நீதிக்கட்சி கொள்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த புத்தகம் வெளியீடு

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா வருகின்ற டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இதில் நீதிக்கட்சி கொள்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த 100 புத்தகங்கள் வெளியிட உள்ளது. 

இதுகுறித்து, தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

திராவிட இயகங்களின் முன்னோடி அமைப்பான நீதிகட்சி தனது கொள்கைகளை பிரகடனம் செய்து நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், திராவிட இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெற உள்ளது. 

வருகின்ற 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த விழாவில் நீதிக் கட்சியின் வரலாறு மற்றும் அதன் சாதனைகள் குறித்த தொகுப்புகள் அடங்கிய நூறு புத்தகங்களை வைகோ வெளியிட உள்ளார், அதனை தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் இராசேந்திரன் பெற்றுக்கொள்ள உள்ளார்.

இவ்விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நீதியரசர் அரிபரந்தாமன், திமுக பாராளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், தகலான் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்ற உள்ளனர்.

தொடர்ச்சியாக கருத்தரங்கும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தமிழகத்தை தனித்தன்மை கொண்ட மாநிலமாக காரணமான நீதி கட்சியின் கொள்கை பிரகடன நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கருப்புச் சட்டை பேரணியும் நடத்தப்பட உள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்'' என அவர் கூறினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...