தேர்தலுக்காக மக்கள் நலக் கூட்டமைப்பு மக்கள் நலக்கூட்டணியாக மாறியதே தவிர இது ஒரு நிரந்தர அமைப்பு இல்லை என திருமாவளவன் தகவல்


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூடலூரில் நடைபெற உள்ள பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில்,

கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக பிரதமர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டை அறிவித்ததின் மூலம் கருப்பு பணம் இரட்டிப்பாக மாறி உள்ளதாக குற்றம்சாட்டினார். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற உள்ள மாநாட்டில் ஒருமித்த கருத்து உள்ள இடத்து சாரி கட்சி தலைவர்கள் பங்கேற்பதாகவும், பணவிவகாரம் தொடர்பாக பிரதமரின் கருத்தை ஆதரிக்கும் மதிமுக பங்கேற்காது எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பாக வைகோவிடம் தெளிவுபடுத்தி விட்டதாகவும் இது மக்கள் நலக் கூட்டணியில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார். மக்கள் நலக் கூட்டமைப்பு நிரந்தமில்லை என டி.கே.ரங்கராஜன் தெரிவித்த கருத்தை ஆமோதித்த திருமாவளவன், மக்கள் பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து போராட மக்கள் நலக்கூட்டமைப்பு அமைக்கப்பட்டதாகவும், தேர்தலுக்காக அது மக்கள் நலக் கூட்டணியாக மாறியதே தவிர இது நிரந்தர கூட்டமைப்பு இல்லை என தெரிவித்தார். மேலும், மக்களின் பிரச்சனைகள் அடிப்படையில் ஒன்று கூடுவோம் எனவும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஜல்லிகட்டு தொடர்பாக திமுகவின் அனைத்து கட்சி போராட்டம் தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளது குறித்து தனக்கு தகவல் வரவில்லை எனவும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நீதிமன்ற நடவடிக்கையும் தாண்டி நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

பொது சிவில் ஷரியத் சட்டம் இஸ்லாமியர்களின் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது. பாஜக அரசு வேண்டும் என்றே இந்த செயல்களில் ஈடுபடுகிறது. இதனை எதிர்க்கும் வகையில் கூடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...