கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்கும் முயற்சி முறியடிப்பு

கோவை போத்தனூரை அடுத்த சாய் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதே பகுதியில் 'பேரிலேண்ட் - சாய் அமரந்தா' என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இங்கு  130 வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.



இது குறித்து சாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் கலா கூறியதாவது :-

எங்கள் பகுதியின் ஓரத்தில் உள்ள சாலையில் சாய் அமரந்தா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தோர் தனியாக குழி தோண்டினர். மேலும், குடியிருப்பின் கழிவுகளை அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொய்யல் ஆற்றில் விட இருப்பதாக கூறினர். இது குறித்து, கோவை மாநகராட்சிக்கு புகார் அளித்தோம். புகாரின் பேரில் எங்கள் பகுதி உதவி பொறியாளர் கவிதா அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.   மேலும்,போத்தனூர் போலீசாரும் வந்தனர். தொடர்ந்து, உதவி பொறியாளர் கவிதா, குடிருப்பு நிர்வாகத்தினர் தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். 



இதை தொடர்ந்து அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றங்கரை தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இங்கு உள்ள பல வீடுகளில் போர் போட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம். இது போன்று, கழிவு நீரை நொய்யல் நதியில் செலுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இது போன்ற செயல்களை செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...