அரவிந்த் கண் மருத்துவமனையும் ஸ்ரீராம் ஸ்ரேஸ்டா-வும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்

கோவை மாவட்ட ஸ்ரீராம் ஸ்ரேஸ்டா-வும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கோவை மாவட்டம் மதுக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று அப்பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் அளித்தனர். 

இதில் 15 பேருக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதுகுறித்து இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கூறுகையில், இந்த முகாமின் நோக்கம் சிறந்த கண் பாதுகாப்பு சிகிச்சை அளிப்பதாகும். இந்த நிகழ்வில் மக்களுக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கண்களில் அதிக அழுத்தம் காரணமாக கண்களில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிரந்தர கண்பார்வை பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுகுறித்து எவ்வித அறிகுறியும் தெரியாது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் கண்பார்வை இழப்பிலிருந்து தடுக்கலாம். இம்முகாமின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற முடிந்தது'' என்றார்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...