கோவை மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி சமூக நீதிக் கட்சி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட சமூக நீதிக் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, சூலூர், சுல்தான் பேட்டை, செஞ்சேரி மலை, அன்னூர், கீரணத்தம், கல்லிப்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இரட்டைக் குவளை, சலூன்களில் முடிவெட்ட மறுப்பது, தனி சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு தீண்டாமைகள் நிலவிவருகிறது. 

இதுகுறித்து கடந்த 10 வருடத்திற்கும் மேலாக புகார் அளித்தும் விசாரிக்க வரும் அதிகாரிகள் கையூட்டுப்பெற்றுவிட்டு நடவடிக்கை எடுக்காமல் சென்றுவிடுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக காட்டி விடுதி காப்பாளர்கள் சமையல் உள்ளிட்ட செலவுகளில் அரசிடம் கூடுதல் பணம் பெறுகின்றனர். பல விடுதிகளில் காப்பாளர்கள் விடுதிக்கு வருவதே இல்லை. 4 மாணவர்கள் மட்டுமே விடுதியில் உள்ள நிலையில் 60 மாணவர்கள் என கணக்கு காட்டி ஆயிரக் கணக்கில் ஒரு விடுதில் கொள்ளையடிக்கப்படுகிறது.



இதுகுறித்தும் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக நீதிக் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ந.பன்னீர் செல்வம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...