இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி



கோவை துடியலூர் அருேக வட்டமலைபாளையத்திலுள்ள இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக தொழில் முனைவோர் சந்திப்பு நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் தலைமை ஏற்றார். கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாந்தினி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அலமேலு  விழாவின் முக்கியத்துவத்தை கூறினார். கல்வியியல் துறை இயக்குநர் எபினேசர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார் .



விழாவில் பெங்களூர் பியுல்லாட்ரிம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கநாத் தோட்டா பேசுகையில்; தொழில் முனைவோர் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகளை தன் அனுபவத்தின் மூலம் திறம்பட பட்டியலிட்டு நேர்மை, விடாமுயற்சி, ஈடுபாடு, பொருளாதார கொள்கைகள், உலகளாவிய பொருளாதார நிலைப்பாடு, ஒரு தொழில் முனைவோரிடம் ஏற்படுத்தும் தாக்கத்தினையும், அதன் மகத்துவத்தையும் எடுத்துரைத்தார். 

மேலும் விழாவிற்கு கோவை மில்டக்ஸ் இன்ஜினியரிங், ஸ்டிேரா இ -பைக், நிர்வாக இயக்குநர் மணிகண்டன் மற்றும் கோவை கேசவ் இன்னோவேஷன் செல்யுசன்ஸ் இயக்குநர் கார்த்திகேயன் ஜவஹர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டு தங்களுடைய  அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கு கல்லூரியில் கடந்த 18 வருடங்களில் படித்து, தொழில் முனைவோர்களாக பல்வேறு மாநிலங்களில் இருப்பவர்கள் சுமார் 75 பேர் தங்கள் படைப்புகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பம்சமாகும். இச்சந்திப்பின் போது கல்லூரியில் தற்போது பயின்று வரும் மாணவர்கள்  தங்கள் படைப்புகளை சமர்ப்பித்தனர் சிறந்த படைப்பிற்கு ஊக்க பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...