சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய சிபிசிஐடி பொது ஆய்வாளர் அதிகாரிகளுக்கு அறிவுரை

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டுமென சிபிசிஐடி பொது ஆய்வாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால், காவல் துறையினர் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் கொலை நடந்த நாளான்று பதிவான சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் சசிகுமாரின் செல்போன் பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். 

இதைத்தொடர்ந்து, சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் உத்தேச வரைபடங்கள் வெளியிட்ட போதும், எந்தவித துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி காவல் துறையினர் திணறி வருகின்றனர். 

இந்நிலையில் சசிகுமார் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி காவல் துறை பொது ஆய்வாளர் மகேஷ்குமார் அகர்வால் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசணை மேற்கொண்டார். 

அப்போது இதுவரை வழக்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கிடைத்துள்ள தடயங்கள், வழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழக்கை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கிய அவர், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...