நாடு முழுவதும் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு


நாடு முழுவதும் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்படும் மதுக்கடைகளால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. இதனால் நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என மூத்த வழக்கறிஞர் கே.பாலு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. 

இவ்வழக்கிற்கான தீர்ப்பை இன்று வழங்கிய உச்சநீதிமன்றம், மாநில மற்றும் தேசிய நெஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், தற்போதைய மதுக்கடைகளை 2017-ம் ஆண்டு ஏப்ரல் வரை நடத்தலாம் என்றும் அதன் பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...