வாட்சப்பில் ஜெ.குறித்து வதந்தி கிளப்பிய வழக்கறிஞரை கைது செய்ய கோரி சமூக விழிப்புணர்வு இயக்கம் மனு

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று தன்னை கூறிக்கொண்ட கிருஷண மூர்த்தி என்பவர், நேற்று ஜெயலலிதா குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக குற்றம் சாட்டி, சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான சாக்ரடீஸ் இன்று கோவை மாநகர  காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.



இது குறித்து வழக்கறிஞர் சாக்ரடீஸ் கூறியதாவது :- 

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று சொல்லிக்கொண்டு கிருஷ்ண மூர்த்தி என்பவர் சமூக வலைதளங்கள்  மூலம் பொய்யான பிரச்சரத்தை  செய்துவருகிறார். இதனால், நீதிமன்றத்தில் நேற்று கலவரம் ஏற்பட நேர்ந்தது.

 மேலும் மன்னார் குடியில் வாழும் மக்களை மற்ற மக்கள் தவறாக எண்ணும் விதமாக அவரது பிரச்சாரம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் போலி டாக்டராக பணியாற்றி கைதுசெய்யப்பட்டர். 2009ல் மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்யாமல் வாதாடியதாக வழக்கு உள்ளது. மேலும், அவர்   சட்டக்கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் அதனால் அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருக்க வாய்ப்பே இல்லை. இது குறித்து விசாரணை நடத்தி  கிருஷ்ண மூர்த்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...