ஓ எல் எக்ஸ்-யில் கார் விற்பனைக்கு என கூறி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது



கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் சாலை ஸ்ரீபதி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அருண்பாபு (60). கடந்த மாதம் 27ம் தேதியன்று (OLX) ஓஎல்எக்ஸ்-யில் கார் ஒன்றின் விற்பனைக்கான விளம்பரத்தினை பார்த்துள்ளார். அதன் விலை 4.5 லட்சமாகும் . 

இதைத்தொடர்ந்து அந்த கார் விளம்பரத்தினை பதிவிட்டவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரிக்கையில் அவர்கள் முன்தொகையாக 5 ஆயிரம் ரூபாயினை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். அருண்பாபுவும் அந்த தொகையினை செலுத்தியுள்ளார்.

பின், அந்த நபர்களிடம் இருந்து எவ்வித தகவலும் அருண்பாபுவிற்கு வரவில்லை . தொடர்ந்து அந்த தொலைபேசி எண்ணும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அருண்பாபு இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைமில் கடந்த 31ம் தேதியன்று புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பொள்ளாச்சியை சேர்ந்த நரேஷ் (22), செரிஃப் (22), அபுதாகிர் (22), முஸ்தப்பா (21), முசாதிக் (21), சம்ருதின் (19) மற்றும் மதினா பேகம் (29) ஆகிய 7 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, அந்த 7 பேரையும் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இதுபோன்று போலியான விளம்பரங்கள் கொடுத்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

இந்த 7 பேரின் புகைப்படங்களும் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடவுள்ளதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...