கோவையில் தடையை மீறி மது விற்பனை செய்த 15 பேர் கைது.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூன்று நாட்கள் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் தடையை மீறி, மது விற்பனை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

டாஸ்மாக்  கடைகளிலில் இருந்து சற்று தொலைவில் நின்று கொள்ளும் பார் ஊழியர்கள் மது பாட்டில்களை மறைத்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்தனர். இதையறிந்த போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பீளமேடு, ஆர்.எஸ்.புரம் , தொண்டாமுத்தூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் தடையை மீறி மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதைத்தொடர்ந்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 451 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு விற்பனையாகும் மதுவை அருந்துபவர்கள் மது போதையில் தேவையில்லாத ரகளையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த மூன்று நாட்களும் மது விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...