தமிழக முதல்வரின் மறைவையொட்டி கோவையில் கண்ணீர் அஞ்சலி!


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று இரவு (டிச. 6) சுமார் 11.30 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெருட்சோடியே காணப்படுகின்றது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பெரும்பாலான அலுவலகங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் போக்குவரத்து குறைவாகவே காணப்படுகிறது. சிறிய மள்ளிகைக் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இருப்பினும் அத்யாவசியத் தேவைகளான மருந்துக் கடை, பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ் ஆகியவை செயல்பட்டு வருகிறது.



இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை விரைந்தனர். மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உயிரிழந்த தமிழக முதல்வருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில், காந்திபுர பேருந்து நிலையத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஜெயலலிதாவின் உயிரிழப்பையொட்டி ஒப்பாரிவைத்து அஞ்சலி செலுத்திவந்த நிலையில் இரண்டு பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்ட மற்ற அதிமுக-வினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.



Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...