முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த பதிவுகளைக்காட்டி சமூக வலைத்தளங்களில் முட்டிக்கொள்ளும் இளைஞர்கள்


தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஜெயலலிதா-வின் உடல்நிலை குறித்து பலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் பலர், முதல் அமைச்சர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளனர். முகநூலில் பேசப்பட்ட தலைப்புகளில் (டிரெண்டிங்) ஜெயலலிதாவின் பெயர் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் சிலர், முதல் அமைச்சர் உடல் நிலை குறித்த அவதூறான தகவல்களை  பதிவேற்றி வருகின்றனர். இந்த பதிவுகளை பார்க்கும் ஜெயலலிதா நலம் விரும்பிகள் கொதிப்படைந்து பதிவிட்ட  அந்த நபரை திட்ட, பதிலுக்கு எதிர்தரப்பில் இருந்தும் தாறுமாறான வார்த்தைகள் வெடிக்க இரு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் சண்டையிட்டு கொள்கின்றனர்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் குறித்து அவதூறு பரப்புவோர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...