மகனிடம் தாயை சேர்த்த ஈர நெஞ்சம் !


கடந்த ஏப்ரல் 4ம் தேதி ஆந்திராவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயிலில் இருந்து இறங்கியவர் சுப்பம்மாள். ஆந்திர மாநிலம் பொன்னூர் பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி, ரயில் பிரயாணத்தின்போது தவறுதலாக குடும்பத்தினரை பிரிந்து கோவை வந்தார். புரியாத மொழி, புதுப்புது மனிதர்கள், கூட்ட நெரிசல் என்று விழி பிதுங்கி நின்றார் சுப்பம்மாள். இது குறித்து தகவலறிந்த, கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் ரயில் நிலையம் சென்று அந்த மூதாட்டியை மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்றனர். 



தொடர்ந்து சுப்பம்மாளிடம் பேசி அவர் ஊர், பெயரை பெற்ற ஈர நெஞ்சம் மகேந்திரன், சுப்பம்மாளின் குடும்பத்தினர் குறித்த விவரங்களை சேகரித்தார்.முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுப்பம்மாளின் புகைப்படத்துடன் அவர் தற்போது இருக்கும் முகவரியை சேர்த்து பதிவு செய்தார். 

இந்த தகவல் ஹைதராபாத்தில் உள்ள சுப்பம்மாளின் மகன் ராமாராவ் என்பவருக்கு கிடைக்கவே, இன்று கோவை வந்த அவர் ஈர நெஞ்சம் அறக்கட்டளையில் தங்கியிருந்த தாயை சந்தித்தார். மகன் வந்ததையறிந்த சுப்பம்மாள் ராமாராவை கட்டி அழுத காட்சி காண்பவர்  நெஞ்சை கசிய வைத்தது. தொடர்ந்து இன்று சுப்பம்மாள் தனது மகனுடன் ஆந்திரா சென்றார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...