முழுமையான ஊதியம் வழங்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் அன்றாட செலவுகளுக்கு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பணப் பரிவர்த்தனையும் கட்டுப்பாட்டில் உள்ளதால் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதில் பிரச்சனைகள் நிலவி வருகிறது.

அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தற்போது மாத ஊதியமாக 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக தரப்பட்டுள்ளது. மீதி தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பாதித் தொகை மட்டுமே ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், முழுமையான ஊதியத்தை உடனடியாக தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் அரசு போக்குவரத்து பேருந்து பனிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர் மேற்கொண்ட பணிக்கான ஊதியத்தை உடனடியாக முழுத் தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...