முழுமையான ஊதியம் வழங்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் அன்றாட செலவுகளுக்கு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பணப் பரிவர்த்தனையும் கட்டுப்பாட்டில் உள்ளதால் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதில் பிரச்சனைகள் நிலவி வருகிறது.

அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தற்போது மாத ஊதியமாக 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக தரப்பட்டுள்ளது. மீதி தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பாதித் தொகை மட்டுமே ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், முழுமையான ஊதியத்தை உடனடியாக தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் அரசு போக்குவரத்து பேருந்து பனிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர் மேற்கொண்ட பணிக்கான ஊதியத்தை உடனடியாக முழுத் தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...