உடல் தானத்தில் கின்னஸ் சாதனைபடைத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு விருது




உடல் உறுப்பு தானத்திற்காக எட்டு மணிநேரத்தில் 13,206 பேரை கையெழுத்திட வைத்து கின்னஸ் சாதனை படைத்த ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு “சிறந்த பொது சேவை திட்ட விருது” வழங்கப்பட்டுள்ளது. 

புது தில்லியில் உள்ள லலித் ஹோட்டலில் நடந்த சர்வதேச மருத்துவ கருத்தரங்கையொட்டி நடந்த விருது வழங்கும் விழாவுக்கு பிரபல நடிகையும், மக்களவை உறுப்பினருமான கிரண் அனுபம் கேர் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சருமான டாக்டர் சி.பி. தாக்குர் பங்கேற்று விருது வழங்கினார். எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் மருத்துவ சேவைப்பிரிவு மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி வி.ராமகிருஷ்ணா விருதினைப் பெற்றுக் கொண்டார்.

சர்வதேச சுகாதார கருத்தரங்கு மற்றும் விருதுகள், பெருமளவில் பயன் தரும் வகையில் செயல் திறன் மிக்க மருத்துவ சேவை செய்த நிறுவனம் மற்றும் தனிநபர்களை பாராட்டும் விதத்தில் வழங்கப்படுகின்றன. சர்வதேச அளவிலான விருது பெறும் இவர்களை பாராட்ட நாடு முழுவதில் உள்ள பெரும் மருத்துவ நிறுவனங்கள் பங்கேற்றன.

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையானது கடந்த மார்ச் 19ம் தேதி 2016 சனிக்கிழமையன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை எஸ்என்ஆர் கல்லூரி வளாகத்தில் உடல், உடல் உறுப்புதான நிகழ்ச்சியை நடத்தியது. எட்டு மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் 13 ஆயிரத்து 206 பேர் கையெழுத்திட்டு கின்னஸ் சாதனை படைத்தனர். 

இந்த விருதானது, நிறுவனத்தின் சாதனைக்காக மட்டுமின்றி போட்டிகள் நிறைந்த மருத்துவ உலகில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டுள்ளதற்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகத்தினர், பணியாளர்களின் உயர்தர சிகிச்சையுடன் தனிப்பட்ட முறையிலான கவனிப்பும் காரணம். இந்த மண்டலத்தில் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக திகழ நிர்வாகம் உயரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...