கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்  தலைமையில் இன்று (29.11.2016) துவக்கி வைக்கப்பட்டது.

இது குறித்து அவர் பேசுகையில்:-  “கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் நலனை காக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று (29.11.2016) கோவை மாநகராட்சியும் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் இணைந்து மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டது. 



கோவை மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ முகாம் துவக்கி வைத்ததை துப்புரவு பணியாளர்களின் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் வரவேற்று பேசி இந்த மருத்துவ முகாமிற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர்.

இந்த மருத்துவ முகாமை கோவையிலுள்ள முன்னனி தனியார் மருத்துவமனைகள் ஒன்றாக இணைந்து நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தத்தை “YI” மற்றும் “CII” மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரிடம் சமர்ப்பித்தனர். 

அதனை தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மண்டல வாரியாக உள்ள பள்ளிகளில் காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களின் வசதிக்கேற்ப அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்க துப்புரவு அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அனைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இந்த தகவலை துப்புரவு பணியாளர்கள் சங்கங்கள் மூலம் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து துப்பரவு பணியாளர்களும் கலந்து கொண்டு பயன்பெற்ற இம்மாநகராட்சி நற்பெயர் ஏற்பட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி  அலுவலர்  டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், அனைத்து உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், முன்னனி மருத்துவமனைகளான  பி.எஸ்.ஜி, கே.எம்.சி.எச், கே.ஜி, கங்கா, அரவிந்த் கண்மருத்துவமனை, சங்கரா கண்மருத்துவமனை, ராமகிருஷ்ணா, தைரோ கேர், ஜி.கே.என்.எம்,  ஜெம் மருத்துவமனை மற்றும் தனியார் நிறுவனங்களான  ரத்னா ஏஜென்சீஸ், ஐடிசி  தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...