தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாமல் அவசர கோலத்தில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும், பணப் பிரச்சனை 50 நாட்களில் தீர வாய்ப்பில்லை. பணப்புழக்கம் சீரடைய 7 மாதங்கள் ஆகும் என்றார்.

மேலும், பண விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச ஏன் பயப்படுகிறார் என கேள்வி எழுப்பிய அவர், ஜனநாயகத்தை மதித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார். சாதாரன மக்கள் பிரச்சனையை என்னிப் பார்க்காமல் கருப்பு பணத்தை ஒழித்து விட்டோம் என்பது வேடிக்கையானது.

பணம் எடுப்பதற்கு தினம்தினம் புதிய உத்தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது. புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அவசியம் அற்றது. இந்த தாள்கள் கருப்பு பணம் பதுக்கலை மேலும் எளிதாக்கும். புதிய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை அதிகளவில் புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து, பயிர்கள் கருகுவதை பார்த்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என்றார். 

மேலும், தமிழகத்தில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...