கோவையில் அரசு உத்தரவுப்படி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது அனுமதியின்றி செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார்

கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், அவ்வாறு செயல்படும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டும் தற்போது எவ்வித உத்தரவுமின்றி செயல்படுவதாகவும் கூறி கோவை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரஃபி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

அனுமதி பெறாததாலும், முறையான கட்டமைப்பு இல்லாததாலும், முறைப்படி அனுமதியினை புதுப்பிக்காததாலும் தமிழக அரசு உத்தரவுப்படி அன்றைய கோவை மாவட்ட ஆட்சியராக செயல்பட்ட கருணாகரன் பல பள்ளிகளை மூட உத்தரவிட்டார். 

இருப்பினும் தற்போது அந்த பள்ளிகள் எவ்வித அனுமதியும் இன்றி செயல்பட்டு வருகிறது. இது மாவட்டக் கல்வித் துறைக்கு தெரிந்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. பெற்றோர்களும் இதுகுறித்து அறியாமல் தங்களது குழுந்தைகளை அந்த பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். பள்ளி நிர்வாகம் ஆயிரக்கணக்கான ரூபாயினை பெற்றோர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முறைப்படி அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு அனுமதி புதுப்பித்தல், ஆய்வகம், கழிப்பறை, சுற்றுச் சுவர் போன்ற அடிப்படை வசதிகள் முறைப்படி உள்ளனவா ? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அனுமதி பெற்ற பள்ளிகள் தங்களது அங்கீகாரம் பற்றிய அனுமதிக் கடிதத்தை தகவல் பலகையில் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் அமைக்க வேண்டும்.

கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் பல பள்ளிகளில் இட ஒதுக்கீடுகள்  செய்யப்படுவதில்லை. அதனை ஆய்வு செய்து இடஒதுக்கீட்டினை உறுதிசெய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமிராவினை பொருத்த காட்டாயப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...